Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிளே ஆஃப் சுற்றுக்கான வேட்டையில் 3 அணிகள்: சிஎஸ்கே, ஆர்சிபி-யின் நிலை என்ன?

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. டெல்லி அணிக்கு இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்தது. அந்த அணி 14 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் வெற்றியால் 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே முதல் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதனால் மீதம் உள்ள இரு இடங்களுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 10 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றை இழந்துவிட்டன. இந்த வரிசையில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் இணைவதற்காக காத்திருக்கின்றன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்