Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிளே ஆஃப் வாய்ப்பில் சிஎஸ்கே நீடிப்பு: 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பேட்டிங்கை மந்தமாக தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளேவில் 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்