Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆயுஷ் பதோனி ரன் அவுட்: விமர்சனத்துக்கு உள்ளான மூன்றாவது நடுவரின் முடிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆயுஷ் பதோனியை ரன் அவுட் செய்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன். அவர் அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். இந்த சூழலில் நடுவரின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளான வகையில் அமைந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று இரு அணிகளும் லக்னோவில் விளையாடின. இதில் லக்னோ அணி இலக்கை விரட்டியது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்