Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டியுடன் ஓய்வு: சுனில் சேத்ரி அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள கணக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்வரும் ஜூன் 6-ம் தேதி அன்று நடைபெற உள்ள குவைத் அணியுடனான பிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டி தனது கடைசி சர்வதேச போட்டி என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் (150 போட்டிகள்) மற்றும் அதிக கோல்கள் (94 கோல்கள்) பதிவு செய்த வீரராக சுனில் சேத்ரி திகழ்கிறார். 39 வயதான அவர், கடந்த 2005 முதல் இந்திய சீனியர் கால்பந்து அணியில் விளையாடி வருகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்