Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கருந்துளையில் இருந்து எக்ஸ் கதிர்கள் வெளியேற்றம்: இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டுபிடிப்பு

சென்னை: விண்வெளியின் கருந்துளையில் இருந்து அதிக ஆற்றலுடன் கூடிய எக்ஸ் கதிர்கள் சீரற்ற நிலையில் வெளியேறுவதை இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் விண்கலம் கண்டறிந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் வானியல் ஆய்வுக்காக தயாரித்த அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2015 செப்டம்பர் 28-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம், நட்சத்திரங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கு அஸ்ட்ரோசாட் அனுப்பப்பட்டது. இது சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரிய படங்களை நமக்கு வழங்கி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்