Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியர்கள் யாரையும் பிசிசிஐ அணுகவில்லை” - ஜெய் ஷா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் அணுகவில்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்றைய தினம் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்ததாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லங்கர் தெரிவித்த நிலையில், 'பிசிசிஐ ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பாக அணுகவில்லை' என்று ஜெய் ஷா கூறியுள்ளார். மேலும், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் தொடர்பாக பேசிய ஜெய் ஷா, "நானோ, பிசிசிஐயோ எந்த ஆஸ்திரேலிய வீரர்களையும் பயிற்சியாளர் வாய்ப்புக்காக அணுகவில்லை. இது தொடர்பாக வெளிவரும் செய்திகள் தவறானவை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்