Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | சீரற்ற பவுன்ஸர்களால் பேட்ஸ்மேன்கள் காயம்: சர்ச்சையாகும் நியூயார்க் ஆடுகளம்

நியூயார்க்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம் அயர்லாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூயார்க்கில் உள்ள நசாவு கண்டி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்தஅயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்து வீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்திருந்த மைதானத்தை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஹர்திக் பாண்டியா 3, அர்ஷ்தீப் சிங் 2, ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்களை வீழ்த்தினர். எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ரிஷப் பந்த் 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 1, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்