Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

138 வருட வரலாற்றில் 2-வது முறையாக தென் கிழக்கு ஆசியாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப்: சிங்கப்பூரில் நடக்கிறது

சிங்கப்பூர்: இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ், நடப்புஉலக சாம்பியனான 31 வயதான சீனாவின் டிங் லிரென் ஆகியோர் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் உரிமையை சிங்கப்பூர் பெற்றுள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த போட்டியை சென்னையில் நடத்துவதற்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், டெல்லியில் நடத்துவதற்காக அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் விண்ணப்பித்திருந்தன. ஆனால் ஃபிடே சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்