Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜெய்ஸ்வால் - கில் இணை மிரட்டல்: ஜிம்பாப்வே-க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் இதில் இருந்து மீண்டு அடுத்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதன்மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்