Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“இந்தியாவுக்கு பெருமை” - ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாகருக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து 

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாகருக்கு பிரதமர் நரேந்திர மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26ல் கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்