Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கை கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்

பல்லேகலே: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 3 டி 20ஆட்டங்கள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர்வரும்27-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டி 20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி 20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிலீக் சுற்றுடன் வெளியேறி இருந்ததால் கேப்டன் பதவியில் இருந்து ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா விலகியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியஅணிக்கு எதிரான தொடரில் சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சல்வா, சதீரா சமரவிக்ரமா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்