Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று போட்டி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2-வது இடம் பிடித்தார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்