Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் கிராமத்தில் ஆள்மாறாட்டம்: மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல் சிக்கியது எப்படி?

பாரிஸ்: விதிமீறல் செய்ததாக இந்திய மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல் மற்றும் அவருடைய ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ்ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் நேற்று முன்தினம் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அன்டிம் பங்கல் பங்கேற்றார். இதில் அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்த போட்டி முடிவடைந்ததும் அன்டிம் பங்கல் ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்லாமல், தன்னுடைய பயிற்சியார்கள் பதகத் சிங், விகாஷ் ஆகியோர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுளார். இதன் பின்னர் அன்டிம் பங்கல் தனக்குமட்டுமே அனுமதி உள்ள அங்கீகார அட்டையை தன் சகோதரியிடம் கொடுத்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் அனுப்பி தனதுஉடைமைகளை எடுத்துவரக்கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்