Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அஸ்வின் 102*, ஜடேஜா 86* ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை பயன்படுத்தி வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்