புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 சுற்றுப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
0 கருத்துகள்