ஷில்லாங்: ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
புதன்கிழமை அன்று மேகாலயாவின் ஷில்லாங் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி விளையாடினார். சுமார் 286 நாட்களுக்கு பிறகு சர்வதேச கால்பந்து களத்துக்கு அவர் திரும்பி இருந்தார்.
0 கருத்துகள்