சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆட்டத்துக்கு முன்பு வரை சலிப்பூட்டுவதாக இருந்தது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குறித்து ஐசிசி சிந்திக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது யூடியூப் சானலில் கூறியிருப்பதாவது: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து போட்டிக்கு முன்பு, ஒருநாள் கிரிக்கெட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். டி20 போட்டிகளை காண அதிகளவில் ரசிகர்கள் வருகின்றனர். ஏனெனில் இது நான்கு மணி நேரத்திற்குள் முடிவடைகிறது. ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளின் கட்டமைப்பு மேம்பட்டவுடன் டெஸ்ட் கிரிக்கெட் மேலும் சிறந்து விளங்கும் என்று நான் நினைக்கிறேன்.
0 கருத்துகள்