தனது ஐபிஎல் அனுபவங்கள் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஷுப்மன் கில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தூக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் என் அப்பாவுடன் மூன்று அல்லது நான்கு ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்துள்ளேன். ஐபிஎல் தொடங்கி இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அங்கு பயிற்சிக்காக வந்தது. எனக்கு அப்போது 9 அல்லது 10 வயது இருக்கும். என்னிடம் சச்சின் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. பயிற்சியின்போது அவர்களுக்கு நான் பந்து வீசி கொடுத்தேன். அது என் முதல் ஐபிஎல் நினைவுகளில் ஒன்று. அப்போது மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் ஏற்கனவே சச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவர் தான் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காரணம். என் அப்பா அவரின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் கிராமத்தில் சச்சின் போஸ்டர்கள் இருந்தன.
0 கருத்துகள்