Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அன்று இளையோர் உலகக் கோப்பை வென்ற வீரர்; இன்று அம்பயர் - அனுபவம் பகிரும் தன்மய் ஸ்ரீவஸ்தவா

மும்பை: கடந்த 2008-ல் இளையோர் (அண்டர் 19) உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரரான தன்மய் ஸ்ரீவஸ்தவா, இன்று ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் கள நடுவராக (அம்பயர்) செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2008-ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அந்த தொடரில் ஆறு இன்னிங்ஸ் ஆடிய தன்மய் ஸ்ரீவஸ்தவா, 262 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்ந்தார். இரண்டு அரை சதங்கள் இதில் அடங்கும். தற்போது அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்