சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் 228 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து அசத்தியது ஆர்சிபி. இதன் மூலம் அந்த அணி குவாலிபையர்-1 போட்டியில் விளையாடுகிறது.
லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட் செய்த போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ஜிதேஷ் சர்மாவை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் லக்னோவின் திக்வேஷ் ராத்தி. இருப்பினும் அதை லக்னோ கேப்டன் திரும்பப் பெற்றார். அது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை அதிருப்தி அடைய செய்துள்ளது.
0 கருத்துகள்