Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டியில் திண்டுக்கல் - நாமக்கல் மோதல்

சென்னை: தமிழ்​நாடு கால்​பந்து சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ளர் டி.ஆர். கோவிந்​த​ராஜனின் நினை​வாக, தமிழ்​நாடு கால்​பந்து சங்​கம் சார்​பில் ஜூனியர் மகளிர் மாநில கால்​பந்து சாம்​பியன்​ஷிப் போட்டி திண்​டுக்​கலில் நடை​பெற்று வரு​கிறது. 19 அணி​கள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் ஆட்​டங்​களின் முடி​வில் சேலம், திருநெல்​வேலி, சென்​னை, நாமக்​கல், திரு​வாரூர், காஞ்​சிபுரம், திண்​டுக்​கல், திரு​வாரூர் ஆகிய அணி​கள் கால் இறுதிக்கு முன்​னேறின.

நேற்று நடை​பெற்ற முதல் கால் இறுதி ஆட்​டத்​தில் சேலம் 3-0 என்ற கோல் கணக்​கில் சென்னை அணியை வீழ்த்​தி​யது. சேலம் அணி சார்​பில் வர்ஷா 2 கோல்​களும், காவ்யா ஒரு கோலும் அடித்​தனர். 2-வது கால் இறுதி ஆட்​டத்​தில் நாமக்​கல் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் திருநெல்​வேலி அணியை தோற்​கடித்​தது. நாமக்​கல் அணி தரப்​பில் துர்கா கோல் அடித்​தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்