லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பென் டக்கெட் விளாசிய சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 96 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தனர்.
0 கருத்துகள்