Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவின் படை!

ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன.

பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம் மிக வெளிப்​படை​யாக தெரிந்​தது. இரு அணி​களின் வீரர்​களும் களத்​துக்கு வந்​த​போது அவர்​கள், பேசிக் கொள்​ள​வும் இல்​லை, வழக்​க​மான கை குலுக்​கலும் இல்​லை. கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி நடந்த பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலில் 26 பேர் இறந்​தனர். தொடர்ந்து இந்​தியா - பாகிஸ்​தான் இடையே பதற்​றம் அதி​கரித்​தது. ஆபரேஷன் சிந்​தூர் மூலம் இந்​தியா பதிலடி கொடுத்த பின்​னர், போர் நிறுத்​தம் ஏற்​பட்​டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்