Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மந்தனாவின் அதிரடி சதம் வீண்: இந்திய அணி போராடி தோல்வி

புதுடெல்லி: இந்​தியா - ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது கிரிக்​கெட் போட்டி டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய மகளிர் அணி 47.5 ஓவர்​களில் 412 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. பெத் மூனி 75 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 23 பவுண்​டரி​களு​டன் 138 ரன்​கள் விளாசி​னார். ஜார்​ஜியா வோல் 68 பந்​துகளில், 14 பவுண்​டரி​களு​டன் 81 ரன்​களும், எலிஸ் பெர்ரி 72 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும் சேர்த்​தனர்.

413 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணிக்கு ஸ்மிருதி மந்​தனா அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். மட்​டையை சுழற்​றிய அவர், 50 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 14 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இதன் மூலம் சர்​வ​தேச மகளிர் கிரிக்​கெட்​டில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய 2-வது வீராங்​கனை என்ற சாதனையை படைத்​தார். மேலும் இந்​திய வீராங்​க​னை​களில் குறைந்த பந்​துகளில் சதம் விளாசிய தனது முந்​தைய சாதனையை​யும் முறியடித்​தார் மந்​த​னா. இதற்கு முன்னர் அவர், 70 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்