துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாகிப்ஸாதா ஃபர்ஹான், பஹர் ஸமான் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. மட்டையை சுழற்றிய சாகிப்ஸதா ஃபர்ஹான் 35 பந்துகளில் தனது 5-வது அரை சதத்தை விளாசினார். பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி பந்துகளில் சாகிப்ஸதா ஃபர்ஹான் சிக்ஸர் விளாசினார். 9.3 ஓவர்களில் 84 ரன்கள் குவித்து மிரட்டிய இந்த ஜோடியை வருண் சக்ரவர்த்தி பிரித்தார்.
0 கருத்துகள்