Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீர​ரான சாஹிப்​ஸதா ஃபர்​ஹான் 45 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​தார். இறு​திக்​கட்​டத்​தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்​தில் 20 ரன்​கள் எடுத்​தார். இதனால் அந்த அணி​யின் ஸ்கோர் கணிச​மாக உயர்ந்​திருந்​தது. 172 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி அபிஷேக் சர்மா 39 பந்​துகளில் (5 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​கள்) விளாசிய 74 ரன்​கள் மற்​றும் ஷுப்​மன் கில் 28 பந்​துகளில் சேர்த்த 47 (8 பவுண்​டரி​கள்) ரன்​கள் உதவி​யுடன் 18.5 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 174 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அபிஷேக் சர்​மா, ஷுப்​மன் கில் ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 105 ரன்​கள் குவித்து மிரட்​டி​யி​யிருந்​தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்