ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்திருந்தது. 172 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி அபிஷேக் சர்மா 39 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசிய 74 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 28 பந்துகளில் சேர்த்த 47 (8 பவுண்டரிகள்) ரன்கள் உதவியுடன் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து மிரட்டியியிருந்தது.
0 கருத்துகள்