பெர்த்: ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் 2 கட்டமாக நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றிருந்தனர்.
0 கருத்துகள்