Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம் https://ift.tt/3a8eHfg

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இந்த தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம். கோலியை 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் பாபர். கோலி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். 1258 நாட்களாக விராட் கோலி முதலிடத்தை தக்க வைத்திருந்தார்.

அவரை தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான ரோகித் ஷர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் ஃபக்கர் ஜாமன் 778 புள்ளிகளை பெற்று தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாவது இடம் பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் போல்ட்டும், ஆல்  ரவுண்டர்களில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசனும் உள்ளனர். 

பாகிஸ்தான் அணி அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்