Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நினைவிருக்கா | 2009-ல் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருதை விட்டுக் கொடுத்த கம்பீர்!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் பெங்களூரு வெற்றி பெற்றது. போட்டிக்கு பிறகு பெங்களூரு வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ ஆலோசகர் கவுதம் கம்பீர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இருவருக்கும் 100 சதவீதம் அபராதம் விதித்தது ஐபிஎல். அவர்கள் இருவரும் களத்தில் அப்படி நடந்து கொண்டது பலரையும் முகம் சுளிக்க செய்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட வீரர்களான கோலி மற்றும் கம்பீர் இப்படி செய்யலாமா எனவும் ரசிகரகள் விமர்சித்திருந்தனர். அவர்கள் இருவரும் இதற்கு முன்னர் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு தருணங்களில் மல்லுக்கு நின்றுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்