Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கடைசி ஓவரில் மிரட்டிய இஷாந்த்: 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி!

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ். கடைசி ஓவரை அற்புதமாக வீசி ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் டெல்லி அணியின் பவுலர் இஷாந்த் சர்மா.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி விரட்டியது. முதல் ஓவர் முழுவதையும் எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார் சாஹா. அவரது விக்கெட்டை கலீல் அகமது கைப்பற்றினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்