Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாக்குச்சாவடி அருகே பதற்றம் ஏற்படுத்தியதாக அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு! https://ift.tt/3cU1OHq

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பதற்றம் ஏற்படுத்தியதாக அதிமுக - திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளரை தாக்க முயன்றதாக அதிமுகவினர் மீதும், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக திமுக-வினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில், வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய சென்ற திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பரப்புரையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக - பாஜகவினர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால், அதிமுக, திமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் காரை வழிமறித்த அதிமுகவினர் அவரது காரையும் உடைக்க முயன்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், கொலை மிரட்டல் விடுத்து, தாக்க முயன்றதாக அதிமுகவினர் மீதும் வாக்குச்சாவடிக்கு சென்று திரும்புபோது தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்