Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் நேற்று மட்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,462 ஆக அதிகரித்தது. அதேபோல் கொரோனாவால் 167 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

image

இதனிடையே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அனைத்து நீதிபதிகளும் அந்தந்த நீதிமன்றங்களின் அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லியில் இன்று இரவு முதல் அடுத்த திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று இரவு முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்