Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”ஆக்ஸிஜன் தந்து உதவுங்கள்” - மாநில முதல்வர்களுக்கு டெல்லி முதல்வர் வேண்டுகோள்

டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவிடுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ அனைத்து மாநில முதவல்வர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில், உள்ளூர் தேவை போக எஞ்சியவற்றை டெல்லிக்கு கொடுத்து உதவிடுங்கள். மத்திய அரசு எங்களுக்கு உதவியபோதும், அந்த ஆக்ஸிஜன் எங்களுக்கு போதுமானதாக இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறும்போது, “ டெல்லியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் போதுமான அளவு இல்லை. தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் நிலைமை சீரழிந்துவிடும். நாள் ஒன்றுக்கு 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 280 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கிறது” என அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்