Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும்: சென்னை மாநகராட்சி

முழு ஊரடங்கு நாளில் சென்னையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. அதேநேரத்தில் சென்னையில் உள்ள 200 அம்மா உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

image

முன்னதாக, கொரோனா பரவல் வேகமாக பரவிவருவதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், நேற்று தமிழக அரசு திரையரங்குகள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டதோடு, இன்ன பிற தேவைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்