Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் ஒன்றும் அதிகாரபூர்வ தொடர் அல்ல; வீரர்கள் சொந்தச் செலவிலேயே நாடு திரும்பட்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்

ஆஸ்திரேலிய அணியின் அதிகாரபூர்வத் தொடரின் ஒரு பகுதி அல்ல ஐபிஎல் டி20 தொடர். ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்