Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐபிஎல் முடியும்வரை வரமாட்டோம்; தாயகம் திரும்பத் தனி விமானம்: ஆஸி.வாரியத்துக்கு கிறிஸ் லின் வேண்டுகோள்

ஐபிஎல் டி20 தொடர் முடியும்வரை இந்தியாவில்தான் இருப்போம், தொடர் முடிந்தபின் ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்பத் தனியாக விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்