சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டில் முதல்வர் பழனிசாமி 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துள்ளனர்.
முன்னதாக, குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஹெர்னியா என்ற குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்