Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பரவலின் பாதையை தற்போது பார்க்கலாம்.

ஏப்ரல் 8ஆம் தேதி தமிழகத்தில் 4 ஆயிரத்து 276 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 9ஆம் தேதி தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து 5 ஆயிரத்து 441ஐ தொட்டது. ஏப்ரல் 10ஆம் தேதி, 5 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11ஆம் தேதி தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்து 618 ஆக பதிவானது. 

image

ஏப்ரல் 12ஆம் தேதி 6 ஆயிரத்து 711 பேரும், 13ஆம் தேதி 6 ஆயிரத்து 984 பேரும் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஏப்ரல் 14ஆம் தேதி முதல் முறையாக ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது. ஏப்ரல் 15ஆம் தேதியும் தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி முதல் முறையாக தினசரி பாதிப்பு 8 ஆயிரத்து 449ஆக உயர்ந்தது.

image

ஏப்ரல் 17ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 9 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்