Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வாக்குப்பதிவின்போது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் - மம்தா https://ift.tt/2RAjW10

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலம், கூச்பிஹார் மாவட்டத்தில் மாதபங்கா தொகுதிக்கு உள்பட்ட சிதால்குச்சி வாக்குச்சாவடியில் கடந்த 10-ம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில், மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த 5 பேரின் குடும்பத்தினரை முதல்வர் மம்தா பானர்ஜி, மாதபங்காவில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘'வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும். நிராயுதபாணியாக நின்றிருந்த அப்பாவிகளின் கொலைக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் சட்டத்தின்படி தண்டிப்போம். நீதி நிலைநாட்டப்படும். தேர்தல் முடிந்த பிறகு உயிரிழந்த 5 பேரின் நினைவாக சிலைகள் அமைக்கப்படும். அவர்களின் குடும்பத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.  உங்கள் வீட்டுப் பெண்ணாக என்னைக் கருதிக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தைப் படுகொலை செய்பவர்களிடம் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்