Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: சாஸ்திரி செய்த சமாதானம் https://ift.tt/31VfBHA

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் இந்திய கிரிக்கெட்டிலும் கபில்தேவ் – கவாஸ்கர், தோனி – யுவராஜ் சிங், விராட் கோலி – ரோஹித் சர்மா என்று எல்லா காலகட்டத்திலும் இரு துருவங்கள் உள்ளன.

இதில் கடந்த சில காலமாக கோலி – ரோஹித் சர்மா இடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருந்ததைப்போல சித்தரிக்கப்பட்டு வந்தன. அவர்களின் சில நடவடிக்கைகளும் இதை உறுதிப் படுத்துவதாய் இருந்தன. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்கு தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்