Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பூம்புகார்: மொத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவு; மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை! https://ift.tt/3mrPnFY

பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளதால், அந்த பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளன. ஆனால் 50 வாக்குகள் கூடுதலாக 628 வாக்குகள் பதிவாயின. இதுபற்றி சந்தேகம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர்.

பின்னர் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்க முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்