Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் - விஜயலட்சுமி https://ift.tt/3d2H5Bk

சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று, அவரது மகள் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி முதல்முறையாக 'மாவீரன் பிள்ளை' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை கே.என்.ஆர். ராஜா என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். அவரும், திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமியும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

உதவும் குணம் கொண்ட வழக்கறிஞராக திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் விஜயலட்சுமி கூறினார். மேலும் தனது தந்தை குறித்த கேள்விகளுக்கும் விஜயலட்சுமி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், வீரப்பன் வாழ்ந்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று கூறினார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்