Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,077 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 07 லட்சத்து 95 ஆயிரத்து 335 ஆக உயர்வடைந்து உள்ளது. தற்போது 36 லட்சத்து 18 ஆயிரத்து 458 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்