பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிஷன் ரெட்டியின் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தமிழக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியதாவது, “ தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள். தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கும் நாங்கள், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த பாஜகவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. அதில் பாஜக நான்கு இடங்களை கைப்பற்றியது. அதில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்