Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: ஆற்றல் தந்த அம்மா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனைகளில் ஒருவர் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன். பூர்வீகம் தமிழகம் என்றாலும், தற்போது குஜராத் மாநிலத்தில் அவர் வசித்து வருகிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான அவர், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் அளவுக்கு தனக்கு ஆற்றல் அளித்தது தனது அம்மா சரோஜா வாலறிவன்தான் என்கிறார்.

இதுபற்றி கூறும் இளவேனில் வாலறிவன், “என் அம்மா சரோஜா வாலறிவன், குஜராத்தில் உள்ள ஆனந்த் பகுதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக இருந்தார். தற்போது அவர் அகமதாபாத்தில் ஒருகல்லூரியில் முதல்வராக இருக்கிறார். சிறுவயதில் அவர் எங்களையும் கவனித்துக்கொண்டு, ஆசிரியப் பணியையும், அதற்கான பயணத்தை யும் எதிர்கொண்ட விதம் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்