பல்லாவரம் காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிண்டி கொரோனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்களில் ஒருவரான சட்டம் ஒழுங்கு உதவி ஆணையரான அவரது பலி பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்