Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அரசு மரியாதையுடன் நடைபெற்ற எழுத்தாளர் கி.ரா இறுதிச்சடங்கு

தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான எழுத்தாளர் கி.ராவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழின் ஆகச்சிறந்த கதைசொல்லியான எழுத்தாளர் கி.ரா. தனது 99வது வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவலில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.

கி.ரா.வின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தபடியே, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது. தமிழகத்தில் எழுத்தாளர் ஒருவருக்கு அரசு மரியாதை செய்வது இதுவே முதல்முறையாகும்.

மேலும், தமிழக அரசு சார்பில், கோவில்பட்டியில் கி.ரா-வுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது நினைவைப் போற்றும் வகையில் படைப்புகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரங்கம் நிறுவப்படும் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்