Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க கட்சிகள் ஆதரவு

முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுவரும் நிலையில், ஏற்கெனவே மே 10ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களுடன் தனித்தனியாக ஆலோசனையை நடத்தினார்.

முன்னதாக மருத்துவ நிபுணர்கள் குழு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க பரிந்துரை செய்திருந்த நிலையில், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்