Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து சட்டமன்றக் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. 

“போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும். அனைத்து கட்சியின் ஆலோசனையை பெறவே இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். 

முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள  தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் தெரிவித்தார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்