Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'கரிசல் குயில்' கி.ரா இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கி.ரா மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள் என இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் என்கிற கி.ரா (வயது 99) வயது மூப்பால் புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், ''கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!
image
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்